Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புனித ரமலான் நோன்பு: 1-ம் தேதி ஓமனில் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

மஸ்கட்: ஓமனில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் புனித ரமலான் நோன்பு துவங்கியது.

ஓமனில் ரமலான் பிறை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (1-ம் தேதி) ரமலான் முதல் நோன்பாக அறிவிக்கப்பட்டு இஸ்லாமியர்கள் விரதத்தினை தொடங்கினர் என மஸ்கட் தமிழ் இஸ்லாமிய இலக்கிய கழக பொறுப்பாளர் திரு. பஷீர் முகமது தெரிவித்தார்.

பல்வேறு அமைப்புகள் இஃப்தார் எனப்படும் சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை வழக்கம் போல் இந்த ஆண்டும் நடத்தவிருக்கின்றன.

மஸ்கட் தமிழ் இஸ்லாமிய இலக்கிய கழகம் 'தமிழ் குடும்ப நோன்பு திறப்பு சங்கம" நிகழ்ச்சியினை நடத்த உள்ளதாக திரு. பஷீர் முகமது தெரிவித்தார்.

பிறை கண்டு நோன்பு தொடங்குங்கள், பிறை கண்டு நோன்பினை (ரமலான் மாத இறுதியில்) நிறைவு செய்யுங்கள் என்ற நபிகள் பெருமானாரின் சொல்லுக்கேற்ப உலக முஸ்லீம்கள் ரமலான் பிறைகண்டு நோன்பினையும், ஈத் பெருநாளையும் சிறப்பித்து வருகின்றனர்.

அதிகாலை முதல் உண்ணாமலும், பருகாமலும், உள்ளத்தாலும், உடலாலும் விரதம் இருந்து, தங்களது நேரத்தினை குர்ஆன் ஓதுவதிலும் மற்ற நல்வழிகளிலும் செலவு செய்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+