கருவறையே கல்லறையாய்...!
Subscribe to Oneindia Tamil

சூல் கொண்ட பொழுதில் இருந்து
ஒவ்வொரு நொடியிலும்
உன் முகம் பார்க்க தவமிருந்தேன்…
என் கருவில் உருவான
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
என் கற்பனையில் கண்டு பூரித்தேன் ….
உன் முதல் துடிப்பை உணர்ந்த பொழுது
லட்சம் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடித்தன….
வயிற்றில் எட்டி உதைக்கையில்
தொட்டுத்தடவி முத்தமிட்டேன்…
என்னுள் சுற்றி வந்த நீ
உன் இயக்கத்தை திடீரென நிறுத்திக்கொண்டாய் !
என்னுள் இடியை இறக்கிவிட்டு
நிம்மதியாய் நீ உறங்கிவிட்டாய் !
என் கருவரையே உனக்கு
கல்லறையாய் போனதடி கண்ணே…
பத்துத்திங்கள் சுமக்க மட்டும்தான்
நீ எனக்கு வரமளித்தாயோ?
வெற்றுத்தொட்டிலும் வீணாய் போன தாய்ப்பாலும்
உன்னை நித்தம் நித்தம் எண்ணி தவிக்குதடி….!












Click it and Unblock the Notifications