For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

 Thirunallar
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருநள்ளாருக்கு 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்திய அளவில் புகழ் பெற்ற கோவில் காரைக்கால் அடுத்த திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 21 ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருள்ளாருக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், பொறையார், கடலூர், புதுச்சேரி, பட்டுக்கோட்டை, நன்னிலம், வேதாரண்யம், திருவாரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து 24 மணிநேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Sani transition celebration in Thirunallar temple held on December 21st. For that special buses are arranged to Thirunallar from all other towns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X