துபாயில் முனைவர் சேமுமு பங்கேற்கும் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இன்று (2-ம் தேதி) மாலை இஷா தொழுகைக்குப் பின் அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 'மணம் வீசும் மனம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளரும், இனிய திசைகள் ஆசிரியருமான பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications