திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் வாயில்கட்ட தடை-உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கூடுதலாக 2 நுழைவு வாயில் அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகா மண்டபத்தின் தெற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஜெயந்திநாதர் சன்னதிக்கு எதிர்புறமும், மகா மண்டபத்தில் உள்ள நடராஜர் சன்னதிக்கு எதிரேயும் 2 நுழைவு வாயில்கள் அமைக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காயமொழியைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் தந்திர சமிச்யம் விதப்படி கட்டப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை ஒரே கூரையின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் புதிதாக 2 வாயில்கள் அமைப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. இதனால் கோயிலின் தெய்வீக தன்மை பாதிக்கப்படும். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கூடுதலாக 2 வாயில்கள் அமைக்க இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அறநிலையதுறை செயலர், ஆணையர், கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications