துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய பேச்சுப் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் சார்பில் கடந்த 25-ம் தேதி காலை லேண்ட்மார்ர்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
தமிழ்த்துளி அமைப்பு மாணவ, மாணவியரிடையே தமிழ் உணர்வைத் தூண்டும் வகையில் பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த 25-ம் தேதி நடந்த பேச்சுப் போட்டியில் பேச்சாளர்களுக்கு பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டன.
இதில் 3 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பள்ளிகளில் தமிழ் கற்க முடியவில்லை என்றாலும், பேச்சுப் போட்டியின் மூலம் தங்களின் தமிழார்வத்தைக் காட்டினர்.
ரகுராஜ், ரெங்கநாதன், மரியம் கபீர் ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்தனர். பிரியா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். விரைவில் இறுதிப் போட்டி நடைவெறும் என்று அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications