துபாய் பிரிவு இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவராக தமிழர் தேர்வு

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 21-ம் தேதி துபாயில் நடந்தது. அதில் அந்த அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த எஸ். வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துபாய் பிரிவு கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட முதல் வெளிநாட்டு பிரிவாகும். அதில் 1500-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கு முன்பு 2007-08 மற்றும் 2008-09 ஆகிய காலகட்டங்களில் சென்னையைச் சேர்ந்த வி.பி. நாகராஜன் தலைமைப் பொறுப்பினை அலங்கரித்து சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மீண்டும் தமிழரான எஸ். வெங்கடேஷ் 2011-12 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ். வெங்கடேஷுக்கு துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications