தமிழர்களின் தொழிலைப் பறிக்கும் மலையாளிகள், மார்வாடிகள்-தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி கண்டனம்
சென்னை: தமிழர்களின் பாரம்பரியத் தொழிலான நகைத் தொழிலுக்குள் மார்வாடிகள், மலையாளிகள், பெங்காளிகள் புகுந்திருப்பதால் தமிழக பொற்கொல்லர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ் தேச பொதவுடமைக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியசரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மலையாளிகள் , மார்வாடிகளின் ஆதிக்கத்தால் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை பறிபோகிறது.
இதனால் மலையாளியான ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தை கண்டித்து , தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் ஜூவல்லரி முன்பு நாளை மாவட்ட செயலாளர் பழ.ராசேந்திரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
தமிழக தங்க நகைத்தொழிலை மார்வாடிகளும்,மலையாளிகளும், வங்காளிகளும் கைப்பற்றிக்கொண்டு நம் பொற்கொல்லர்களை வீதிக்கு விரட்டி விட்டார்கள்.
வறுமை தாங்காமல் நம் பொற்கொல்லர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications