துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு மற்றும் கல்லூரி மலர் வெளியீடு

ஈமான் அமைபின் பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அப்துல் லத்தீஃப் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மலரை அப்துல் லத்தீஃப் சாஹிப் வெளியிட அதனை ஈமான் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி பெற்றுக் கொண்டார்.
அப்துல் லத்தீஃப் சாஹிப் தனது ஏற்புரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டினார். ஈமான் குழுவினர் தங்களது கல்லூரிக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஈமான் பொதுச்செயலாளர் லியாக்கத் அலி அவர்கள் தனது வாழ்த்துரையில் மிகவும் சிறப்பான கட்டமைப்புடன் செயல்பட்டு வரும் சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியினை சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்வில் ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விழாக்குழு செயலாளர் காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்லூரியின் அமீரகப் பிரதிநிதி அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications