4 நாட்களில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும்: ஐ.நா.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பாபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியதாவது, உலக மக்கள் தொகை இன்னும் 4 நாட்களில் 700 கோடியை எட்ட உள்ளது. தற்போதைய உலக மக்கள் தொகையில், 10-24 வயதுள்ளவர்கள் 180 கோடி பேர் உள்ளனர். உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் அமைய உள்ளதால், அவர்களின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்கால பொருளாதாரம், சுற்றுசுழல் குறைபாடு ஆகியவற்றில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் இந்த நவீன காலத்திலும் ஆண்-பெண் இனப்பாகுபாடு இருக்க தான் செய்கிறது. இந்த பாகுபாடு மறைந்தால் மட்டுமே பல துறைகளில் வளர்ச்சியை எட்ட முடியும்.
வளரும் நாடுகளில் வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, கருத்தடை, எய்ட்ஸ் நோயில் பாதுகாப்பு குறித்த போதிய அறிவு இல்லை. இளைஞர்களின் தேவைகளுக்காக, உலக நாடுகள் அதிக நிதி செலவிட வேண்டும். ஒவ்வொரு நாடும் எதிர்காலத்தை குறித்து திட்டமிட்டு, தகுந்த முறையில் முதலீடு செய்வதன் மூலம், மொத்தமுள்ள 700 கோடி மக்களும் பயன் அடைவார்கள், என்றார்.
உ.பியில் விழா:
மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதை யொட்டி, உத்தரபிரதேச மாநிலம் லக்னெளவில் வரும் 31ம் தேதி சிறப்பு விழா ஒன்றை 'பிளான்' என்ற சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications