துபாயில் புருணை காயிதே மில்லத் பேரவைத் தலைவருக்கு வரவேற்பு!
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் புருணை காயிதே மில்லத் பேரவையின் தலைவரும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலருமான அல்ஹாஜ் ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 07.11.2012 அன்று மாலை துபாய் ரமதா ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் போது மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா மலர் வெளியிடப்பட்டது. மலரை குத்தாலம் ஏ.லியாகத் அலி வெளியிட புருணை காயிதே மில்லத் பேரவைத் தலைவர் ஜஃபருல்லாஹ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் கும்பகோணம் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலர் வாலான் ஜெய்லான் பாட்ஷா, துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, தேரா பகுதி செயலாளர் அய்யம்பேட்டை ராஜாஜி காஸிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்பின் போது தாய்ச்சபை மற்றும் காயிதே மில்லத் பேரவைகளின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகரிக்கப்பட பேரமைப்பாக வெளிநாடுகளில் காயிதே மில்லத் பேரவைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications