துபாயில் அசத்திய இந்திய நண்பர்கள் சங்கத்தின் தீபாவளி உத்சவ்2012

இந்நிகழ்ச்சிக்கு இந்திய நண்பர்கள் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்திய தூதர் சஞ்சய் வர்மா விழாவினை துவக்கி வைத்துப் பேசுகையில், தீபாவளி உத்சவ் நிகழ்ச்சி வேற்றுமையில் ஒற்றுமையினைப் பறைசாற்றுவதுடன் இந்தியத் திருநாடு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கலைகளில் முன்னோடியாக திகழும் என்றார்.
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கே.ஜி. ஜெயனை இந்திய தூதர் சஞ்சய் வர்மா சிறப்பித்தார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கும் இந்தியாவின் இரும்பு மனிதன் அமந்திப் சிங்கும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் பல மாநிலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மேலும் ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இவற்றில் பெண்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு தீபாவளி உத்சவ் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய நண்பர்கள் சங்கம் ரத்ததானம், கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை துபாயில் தொடர்ந்து நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications