துபாயில் தேமுதிகவினர் கொண்டாடிய பொங்கல் விழா
Subscribe to Oneindia Tamil

இந்த விழாவிற்கு தேமுதிக துபாய் பிரிவு செயலாளர் எக்ஸலன்ட் முருகேஷ் தலைமை வகித்தார். தமிழகத்திலிருந்து வந்திருந்த புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு. ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
துணை செயலாளர் தஞ்சை ரவிசந்திரன், துபாய் தேமுதிக உயர்மட்டக்குழுத் தலைவர் முஹம்மது ரபீக், தேரா கிளை செயலாளர் பெரம்பலூர் குமார், வரதராஜ், கல்விக் குழு கமாலுதீன், மருத்துவக் குழு சுந்தர், அபுதாபி கிளை செயலாளர் திருச்சி பாலகிருஷ்ணன், அஜ்மான் கிளை செயலாளர் தங்கராஜ் மற்றும் அனைத்து உயர்மட்டக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பின்னர் தேராவில் நடைபெற்ற உயர்மட்டகுழுக் கூட்டத்தில் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications