பாரதி பிறந்தநாளைக் கொண்டாடிய துபாய் தமிழ்ச் சங்கம்

விழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி. ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
குத்துவிளக்கு ஏற்றி துவங்கிய விழாவில் சந்திரா, சீதாலட்சுமி, கவிதா ஆகியோர் இந்திய தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தினையும் பாடினர். நிதிசாய் மற்றும் கிரிஜா ஆகியோர் திருக்குறள் வாசித்து விளக்கம் வழங்கினர். லோகிதா சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் வழங்கினார்.
அரேபியன் பிசினஸ் இதழின் சிறப்பு மிகு இந்தியராக தேர்வு செய்யப்பட்ட இந்திய சமூக நலச் சங்க கன்வீனர் கே. குமார் கௌரவிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் இத்தகைய உயர்நிலையைப் பெற்றமைக்காக துபாய் தமிழ்ச் சங்கம் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்புரை நிகழ்த்திய கே.குமார் இதுபோன்ற விருதுகளும், கௌரவமும் துபாய் தமிழ்ச் சங்கம் போன்று அனைவரது ஒத்துழைப்பின் காரணமாகவே கிடைத்து வருகிறது என்றார்.
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ரவிபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியின் பெருமையை பறைசாற்றினார். அவருக்கு துபாய் தமிழ்ச் சங்கம் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் கௌரவித்தது.
உடை அலங்காரம், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பெட்டினா ஜேம்ஸ் மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகநாதன், ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், சுந்தர், பிரசன்னா, பாலா, விஜயராகவன், விஜயேந்திரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications