27ல் துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் பொங்கல் விழா: வாசு, கங்கை அமரன், பாலகுமாரன் பங்கேற்பு

இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜகத்ரட்சகன், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவன மேலாண்மை இயக்குநர் சையது எம். சலாஹுத்தீன், திரைப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் இயக்குநர் பி. வாசு மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கின்றனர்.
சென்னை சட்டக்கதிர் ஆசிரியர் முனைவர் சம்பத், சென்னை ஆனந்த் தியேட்டரின் நிர்வாக இயக்குநர் இளம்பாரி கருணாகரன், தோஹா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாராமன், தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவன தலைவர் மருது மோகன், இந்தியா கிளப் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், யுஏஇ எக்ஸ்சேஞ்ச் சுதிர் ஷெட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் 050 14 99 159 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளவும்.












Click it and Unblock the Notifications