20ல் துபாய் தமிழ்ச் சங்க பொங்கல் கொண்டாட்டம் 2012
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் அல் கிஸஸ் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தகவலை சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்தார்.
பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி, குழந்தைகள் பாட்டு, தமிழர் திருநாள் குறித்து குழந்தைகள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி, வில்லு பாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் பொதுச் செயலாளர் சி. ஜெகநாதனை 050 5787657 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு சிவ ஸ்டார் பவன், பிளாக் டுலிப் பிளவர், ராயல் செஃப், பெருமாள் பூக்கடை, மூன் தொலைக்காட்சி, 89.5 எஃப்.எம்., தினமலர், தட்ஸ் தமிழ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications