பொள்ளாச்சி டாப்சிலிப்பில் நாளை யானை பொங்கல் திருவிழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் நாளை (21.1.2012) யானை பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 2 குட்டிகள் உட்பட மொத்தம் 21 யானைகள் உள்ளன. வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். யானைகள் மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானை சவாரியும் நடத்தப்பட்டு வருகின்றது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆண்டு, டாப்சிலிப்பில் வனத் துறை அதிகாரிகள் மூலம் யானை பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு யானை பொங்கல் விழா நாளை (21.1.2012) அன்று காலை 10 மணிக்கு டாப்சிலிப்பில் நடைபெற உள்ளது.
யானைப் பொங்கலை யொட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு பொங்கல், கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் யானைகளுக்கு வழங்கப்படும். யானைப் பொங்கல் திருவிழாவை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிப்பதோடு, அதில் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications