துபாயில் நடந்த உலக நகைச்சுவையாளர் சங்க முதலாம் ஆண்டு விழா
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் முதலாம் ஆண்டு விழா 15.11.2012 அன்று மாலை துபாய் அல்தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரா? வெறும் டம்மி பீஸா? எனும் தலைப்பில் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. அப்பாடக்கர் எனும் அணியில் மர்யம் கபீர், பார்வதி கண்ணன், முஹைதீன் பிச்சை ஆகியோரும், வெறும் டம்மி பீஸ் எனும் அணியில் கங்கா ரமேஷ், பாவை நியாஸ், காமேஷ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் பட்டிமன்றம் கலகலப்பான நகைச்சுவையால் அரங்கமே அதிரும் வண்ணம் நடைபெற்றது. இறுதியாக குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பார்வையாளர்களை தனது நகைச்சுவைப் பேச்சால் கட்டிப்போட்ட தேவகோட்டை ராமநானுக்கு உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் சார்பில் நகைச்சுவை பேரரசு எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நகைச்சுவைப் பேச்சரங்கில் சென்னை பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சரோன் செந்தில் குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
லெகசி எனும் குழந்தைகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது அனைவரையும் கவர்ந்தது. சங்க உறுப்பினர்கள் பாவை நியாஸ், இளையராஜா, முத்துக்கோதை, தண்ணீர்மலை உள்ளிட்டோர் நகைச்சுவைத் துணுக்குகளை வழங்கினர். சௌம்யாவின் பாடல் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
நிகழ்விச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஜி.குணா தலைமையில் முஹைதீன் பிச்சை, கமலக்கண்ணன், சுல்தான், அன்சாரி, அனீஸ், யூசுஃப், ராமபத்திரன், காமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications