துபாயில் இந்திய சமூக நல மையம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
நிகழ்ச்சிக்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இஃப்தார் நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் கன்வீனர் கே.குமார் வரவேற்றார். பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்து விவரித்த அவர் தமிழக சமுதாய அமைப்பான ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பிரமாண்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்காதது நடுநிலையாளர்களை மிகவும் வருத்தமுறச் செய்தது.
உடனடியாக துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மாவிடம் ஈமான் அமைப்பு குறித்து ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கேட்டார். ஈமான் அமைப்பு நிர்வாகிகள் இது குறித்து கேட்கட்டும் என கே. குமார் கூறியபோது, ஜெயந்தி தானும் ஈமானின் ஒரு அங்கமே என தெரிவித்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். நிலைமையை உணர்ந்த கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அனைவரையும் சமாதப்படுத்தினார்.
உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தன்வீர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச் செயலாளர் ஜெகந்நாதன் மற்றும் தூதரக அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications