துபாயில் ந‌டந்த பூஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் ப‌யின்று வ‌ரும் பள்ளி மாணவி குமாரி பூஜா பாலாஜியின் பரத நாட்டிய அரங்கேற்றம் 18.05.2012 அன்று மாலை துபாய் எமிரேட்ஸ் தியேட்டரில் நடந்தது. துபாய் மீனாக்ஷி ஸ்ரீனிவாசனின் சிஷ்யையான குமாரி பூஜா கடந்த 10 ஆண்டுகளாக பரத நாட்டியம் பயின்று வருகின்றார்.

நிக‌ழ்ச்சிக்கு பாங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் ஜிசிசி கிளையின் தலைமை மேலாளர்கே. வ. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துபாய் பாவா குழுவின் தலைவியும், தேர்ந்த நடன கலைஞருமான மீரா ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதலில் புஷ்பாஞ்சலி, அலாரிப்புடன் தொடங்கிய பூஜாவின் ஜதிஸ்வரமும் ,"தாண்டவேஷ" எனும் சிவ ஸ்துதி பாடலும் சிறப்பாக அமைந்தன. அடுத்து "சுவாமி நான் உந்தன் அடிமை" என்ற வர்ணத்துக்கு குமாரி பூஜா காட்டிய பாவங்கள் மற்றும் திறமையான ஜதிக்கோர்வைகள் யாவும் அருமையாக இருந்தன. அடுத்து வந்த ஆடிக்கொண்டார், ஸ்ரீ சக்ர ராஜ, காவடிச்சிந்து பதங்களும் தில்லானாவும் குமாரி பூஜா ஒரு தேர்ந்த நடன கலைஞர் என நிரூபித்தது.

இந்த நிகழ்ச்சியில் குரு திருமதி மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் அவர்களின் அருமையான குரலில் பாடல்களும், கணீரென நிறைவான நட்டுவாங்கமும், பிரதானமாக, வெகு சிறப்பாக பளிச்சிட்டன. திரு. ஸ்ரீனி கண்ணூர் அவர்களின் மிருதங்க லயமும், திரு. சுரேஷ் அவர்களின் வயலின் வாசிப்பும், திரு. சுனில் குமார் அவர்களின் புல்லாங்குழல் துணையும் அமோகமாக பொருந்தி மிக சிறப்பாக அமைந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+