துபாய்: சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் மற்றும் பொருளாளர் திட்டச்சேரி ஹிதாயத்துல்லா ஆகியோர் துபாய் வருகை தந்துள்ளனர்.
இவர்களுக்கான வரவேற்பளிக்கும் நிகழ்வுக்கு ஈடிஏ அஸ்கான் குழும துணைப் பொதுமேலாளர் ஹமீது கான் தலைமை வகித்தார். ஈடிஏ ஸ்டார் கல்விக்குழும இயக்குநர் முனைவர் சையத் எம் கலந்தர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய சிங்கப்பூர் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சங்கம் தொடங்குவதற்கு ஒரு முன்னுதாரணம் அமீரகக் சங்கம் தான். இறையருளால் சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் கல்லூரி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு காரணமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அமீரகச் சங்கத்தினர் ஆதரவு தர வேண்டும் என்றார்.
துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் அப்துல் ரசாக், முதுவை ஹிதாயத், முஹம்மது இசாக், ஹமீதுர் ரஹ்மான், ஹாஜா, அன்சாரி, ஃபலீல், ரஹ்மத்துல்லா, ஜாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications