நாளை துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி நாளை(6ம் தேதி) மாலை 6 மணிக்கு துபாய் தேரா நாஸர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாணவர் சங்க தலைவரும், லேண்ட்மார்க் ஜீனத் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான சையது முஹம்மது சாதிக் இஃப்தார் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். முன்னாள் மாணவர் சங்க நிறுவன பொதுச் செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் சூப்பர் சோனிக் குழும மேலாண்மை இயக்குநர் ஏ.எம்.இசட். ஜியாவுதீன் ஆகியோரும் சிறப்புரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்தீக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் மாணவர்கள் தங்களது வருகையினை 050-5489609 / 050 88 27 493 / 050 51 96 433 ஆகிய அலைபேசி எண்களில் தெரிவித்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications