குவைத் இந்திய தூதருடன் கே-டிக் நிர்வாகிகள் சந்திப்பு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள் குவைத்துக்கான இந்திய தூதரை கடந்த மாதம் 22ம் தேதி சந்தித்து பேசினர்.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) நிர்வாகிகள் குவைத்துக்கான இந்திய தூதர் சதிஷ் சி மேத்தா அவர்களை கடந்த மாதம் 22ம் தேதி சந்தித்து பேசினர்.
சங்கத்தின் தலைவர் மௌலவி எம். முஹம்மது மீரா ஷா பாஜில் பாகவி, பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி ஏ.பி. கலீல் அஹமத் பாகவி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாசர், பொருளாளர் எம். ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் இந்திய தூதரை சந்தித்துப் பேசினர்.
அப்போது குவைத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்காக கே-டிக் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து சங்க தலைவர் விவரித்தார்ர்.