துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சிறப்பிதழ்கள் வெளியீடு மற்றும் கவியரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி ஆனிஷா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. அமீரகத்திற்கு பன்னாட்டு இஸ்லாமியக் கழகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த சிறப்பு விருந்தினர் வாணியம்பாடி பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் - நண்பர்கள் குத்தலாம் அஷ்ரப், எஸ்.எம்.பாரூக் மற்றும் ஹனீபா ஆகியோரின் உதவியால் வானலை வளர்தமிழ் அரங்கிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி தந்தார். தன் இனிய தமிழால்.. வானலைக்கு வாழ்த்துரைக்கும்போது விலைவாசி போல் வாழ்க என்று வாழ்த்தலாம் என்றால் அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. உலகில் வளர்ச்சி மட்டுமே கொண்டது வயது மட்டும்தான். எனவே வயது போல் வானலை வளர்தமிழ் வாழ்க என்று வாழ்த்தினார். பேராசிரியரை தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் அமைப்பின் சார்பில் வரவேற்றார். பொதுச் செயலாளர் சிம்மபாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
தமிழ்த்தேர் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பான கவியரங்கில் அனைத்து கவிஞர்களையும் புதுமையான முறையில் விதவிதமான கதைகள் சொல்லி, கருத்தை அள்ளி கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிய திண்டுக்கல் ஜமால் வரவேற்றார். விருதை மு.செய்யது உசேன், ஜெயராமன் ஆனந்தி, சந்திரசேகர், இளையசாகுல், யமுனாலிங்கம், முத்துப்பேட்டை ஷரிபுதீன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, நர்கீஸ்பானு, முகவை முகில் ஆகியோர் பங்கேற்று தம் கவிதைகளை வழங்கினர்.
தமிழ்த்தேரின் 68வது மாத இதழான 'அறிவு' சிறப்பிதழை பேராசிரியர் அப்துல் காதர் வெளியிட்டார்.
இந்த மாதத்தின் சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற உலக நகைச்சுவையாளர் மன்றம், துபாய் பிரிவின் தலைவர் திரு.முஹைதீன் பிச்சை அவர்கள் நகைச்சுவை உணர்வின் அலைகளை அரங்கத்தில் பரப்பி, அறிவைப் பற்றியும் வண்ணங்களைப் பற்றியும் அடுக்கடுக்காய் எண்ணப் பதிவுகளை வழங்கினார். தாங்கள் நடத்துகின்ற நகைச்சுவையாளர் கூட்டத்தில் வானலை வளர்தமிழ் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சிறப்பு விருந்தினரைப் பற்றிய இனியதொரு அறிமுகத்தை திரு.முகமது இத்ரிஸ் தந்தார்.
அடுத்து தமிழ்த்தேரின் 69வது இதழான 'வண்ணங்கள்' இதழ் வெளியிடப்பட்டது.
வண்ணங்கள் சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.முஹைதீன் பிச்சை வெளியிட நர்கீஸ் பானு பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை காஷ்மீர் இலக்கிய ஆய்வாளர் டாக்டர் ஓவிஸ் வெளியிட முஸ்தபா பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை ஹெல்த் கணேசன் வெளியிட இளங்குமரன் பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர் முஹைதீன் பிச்சை அவர்களுக்கு நினைவுப்பரிசை நர்கீஸ் பானு வழங்கிட, மாத இதழ்களை அழகாய் வடிவம் பெறச்செய்து அரிய பணியை நிறைவேற்றித்தரும் ஜியாவுதீன் அவர்களுக்கு நினைவுப்பரிசை அனீஸ் அவர்களும், கவியரங்கத் தலைமையேற்ற திண்டுக்கல் ஜமால் அவர்களுக்கு நினைவுப்பரிசை முத்தலிப் இக்பால் அவர்களும் வழங்கினார்கள்.
வானலை வளர்தமிழ் பற்றிய ஊடகச்செய்திகளை ஒருங்கிணைத்து அதன் பிரதியை அமைப்பாளர்களுக்கு வழங்கி அறிமுகமானார் முஸ்தபா அவர்கள். அவர் தந்த செய்திகளின் தொகுப்பை உமர் அவர்கள் வெளியிட அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார்.
அடுத்த மாதத் தலைப்பான 'நம்பிக்கை' மற்றும் 'மை' ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 30.09.2012க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திருமதி.நர்கீஸ் பானு வரவேற்றார். ஜெயராமன் ஆனந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளர் ஆதிபழனி நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி மற்றும் ஆதிபழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?













Click it and Unblock the Notifications