நர்ஸுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க பரிந்துரைத்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்!

அந்த சுவாரஸ்யமான பகுதி..
பத்ம விருதுகள் பெறுவோரை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தீவிரமாக இருந்தனர். பட்டியலை இறுதி செய்து குடியரசுத் தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு திருத்தத்தைக் கூறினார் ராஜேந்திர பிரசாத்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த செல்வி லாசரஸ் என்று ஒரு பெயரை அதில் அவர் சேர்த்தார். அவரே அப்பெயரையும் பட்டியலில் கைப்பட எழுதினார். அப்போது யார் இந்த லாசரஸ் என்று யாருக்குமே தெரியவில்லை. சென்னையில் லாசரஸ் என்ற பெயரில் ஒரு கல்வியாளர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்தான் அந்த விருது பெறப் போகிறவர் என்று நினைத்து சென்னைக்குப் போன் செய்து லாசரஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திருத்தப்பட்ட பட்டியலை மீண்டும் ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பினர். ஆனால் பட்டியலைப் பார்த்த அவர், இந்த லாசரஸ் இல்லை, இவர் ஒரு நர்ஸ் என்று கூறி திருப்பி அனுப்பினார்.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராஜேந்திர பிரசாத்தின் உதவியாளர் கூறுகையில், இந்த லாசரஸ் ஒரு நர்ஸ். ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத்துக்கு ராஜேந்திர பிரசாத் பயணித்தபோது உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது இந்த நர்ஸ்தான் அவருக்கு பல உதவிகளைச் செய்து உடல் நலக்குறைவை சரி செய்தார் என்றார்.
இதையடுத்து அந்த நர்ஸைக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டு உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து சென்னை லாசரஸுக்கும், ஆந்திர நர்ஸ் லாசரஸுக்கும் ஆளுக்கு ஒரு பத்மஸ்ரீ விருதைக் கொடுத்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications