துபாயில் ராபின் சர்மா கலந்து கொண்ட கருத்தரங்கு

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா ( ICAI ) அமைப்பின் துபாய் கிளைத் தலைவர் எஸ். வெங்கடேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ராபின் சர்மா நடத்தும் இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருப்பது பெருமைக்குரியது. இவ்வமைப்பின் மைல்கல்லில் இதுவும் ஒன்று. ராபின் சர்மாவின் தலைமைப் பண்பு குறித்த கருத்துக்கள் ஒவ்வொருவரது முன்னேற்றத்திற்கான மூலதனம் எனப் பெருமையுடன் குறிப்பிடலாம் என்றார்.
உலகின் தலை சிறந்த தலைமைப்பண்பு மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்களில் ஒருவரான ராபின் சர்மா சிறப்புக் கருத்தரங்கினை நடத்தினார். அவர் தனது உரையில் உலகில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் கடின உழைப்பின் காரணமாகவே அந்நிலையினை அடைந்தனர். வரும் 20 ஆண்டுகள் வர்த்தகவியலாளர்கள் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிய தருணமாக இருக்கும். எனவே இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு புதுமைகளைக் கண்டு வெற்றிகாண வேண்டும் என்றார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, இந்திய தூதரக முதல்நிலைச் செயலாளர் அருண் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கருத்தரங்கு உறுப்பினர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் அபுதாபி கிளை தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இது போன்ற உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர்களை வைத்து சிறப்புக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறினார்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் துபாய் கிளையில் 1700 உறுப்பினர்களும், அபுதாபி கிளையில் 500 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications