ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி
ஜித்தா: தஃபாரெஜ் ஜித்தா அமைப்பின் 9வது குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி இஸ்திரஹாவில் நடந்தது. அதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ் ஜித்தா அமைப்பினர் இந்த முறை ஒன்பதாவது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர் குழந்தைகள் சகிதமாய் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் மறுநாள் அதிகாலை 1 மணிக்கு தான் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சியில் ஸ்கிப்பிங், ஓட்டப் பந்தயம், மியூசிக்கல் சேர், மெல்ல நடப்பது, பொது அறிவுப் போட்டி, தம்போலா, எழுத்துப் போட்டி, அறிவுத்திறன் போட்டி, வாலிபால், கயிர் இழுத்தல், செய்கை முறையில் பதிலளி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக வந்திருந்த அனைவர்களுக்கும் இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், சமோசா, குருவாசொன்ட், டோநட் குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.
தஃபாரெஜ் ஜித்தா அமைப்பினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.