துபாயில் திருமாவளவன்

அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் திருமாவளவனுக்கும், முகமது யூசுபிற்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அமீரகத்துக்கு வந்தபோது அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார். மேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள நட்பினை விவரித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்.பி.க்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வரவேண்டியதன் அவசியம் குறித்தும், வளைகுடாத் தமிழர்களின் நிலை குறித்து அறிய வேண்டியது குறித்தும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications