குவைத்தின் 51வது தேசிய தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்
குவைத்தின் 51வது தேசிய தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சார்பில் 25.02.2012 அன்று ஜப்ரியா மத்திய ரத்த வங்கியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
பேரவையின் பொருளாளர் சாகுல் ஹமீது ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். செயலாளர் முனீர் அஹமது இறை வசனங்களை ஓதினார். தலைவர் ஆவூர் பஷீர் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.
முகாமின்போது மத்திய ரத்த வங்கியின் இயக்குனர் டாக்டர் ரானா ஹுசைன் அப்துல் ரசாக் கௌரவிக்கப்பட்டார். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு பெற்று மதம்,இனம், மொழிக்கு அப்பாற்பட்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications