துபாயில் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய இறகுப் பந்து போட்டி 2012, காதலர் தின கொண்டாட்டம்
அமீரக தமிழ்ச் சங்கத்தின் 2வது ஆண்டு இறகுப் பந்து போட்டி 2012 கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் பின்புறம் உள்ள உள்ளரங்கில் நடைபெற்றது. கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் குழந்தைகள் (வயது 9-16) மற்றும் இளநிலை / குடும்ப மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், காதலர் தினம் கொண்டாட்டம் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை 256 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகள் இரட்டையர் பிரிவில் மாஸ்டர். ரோஷன் மல்லிகார்ஜூன், லாவண்யா கண்ணனும், மகளிர் இரட்டையர் பிரிவில் கீதா மல்லிகார்ஜூன், ராஜேஸ்வரி ரவியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஸ்ரீராம் விஸ்வநாதன், காமாக்ஷி ஸ்ரீராமும் வெற்றி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸைட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்கள் விருது வழங்கி கெளவுரவித்தார்.













Click it and Unblock the Notifications