For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று துபாயில் வானலை வளர்தமிழின் இல‌க்கிய‌ கூட்ட‌ம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் இன்று(24ம் தேதி) காலை 9.00 மணிக்கு துபாய்- கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் நடக்கிறது. அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக 'மனசு", 'ஆற்றல்" மற்றும் 'கனவு" ஆகிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன என‌ அமைப்பின் ஆலோச‌க‌ர் காவிரிமைந்த‌ன் தெரிவித்துள்ளார்.

கவியரங்கம், சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கும்ப‌கோண‌ம் அர‌சு கலைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறை பேராசிரிய‌ர் பொன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இல‌க்கிய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் சுற்றம் சூழ வந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 251 9693 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொள்ளலாம்.

English summary
Vaanalai valar tamil's literary meet will be held on february 24 at Sivestar bhavan restaurant, Dubai. For more details contact 050 2519693
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X