துபாயில் செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சி, கவிதை நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை ஷர்புத்தீன் தலைமை தாங்கினார். ஆதிபழனி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் மற்றும் இலக்கிய ஆர்வலர் உயர்திரு. எஸ்.எம். இதயத்துல்லா அவர்களும், துபாய் ஸ்கை குரூப் உரிமையாளர் உயர்திரு.சீனா தானா அவர்களும் கலந்து கொண்டனர்.
செந்தமிழும் சென்னைத் தமிழும் சிறப்பு நிகழ்ச்சியை முதன் முறையாக வானலை வளர்தமிழ் அமைப்பில் நடத்தித் தர திருமதி. ரமா மலர்வண்ணன் அவர்கள் வருகை தந்ததுடன் முத்துப்பேட்டை ஷரிபுதீன், சி.இராமலிங்கம், முகவை காளிதாஸ், சீனா தானா, திண்டுக்கல் ஜமால் மற்றும் திருமதி.ஸ்வேதா ஆகியோர் பங்கேற்க நகைச்சுவை விருந்தாய் அமைய அரங்கம் முழுவதும் கரகோஷம் ஆர்ப்பரித்தது. குறிப்பாக சென்னைத் தமிழ் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. பல்வேறு மொழிகளின் சங்கமமாகவே சென்னைத் தமிழ் திகழ்வதாக அறியப்பட்டது.
விழாவில் திரு.எஸ்.எம்.இதயத்துல்லா அவர்களுக்கு நூலாசிரியர் அதிரை இளைய சாகுல் பொன்னாடை அணிவிக்க நினைவுப் பரிசினை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் திரு.ஜியாவுத்தீன் வழங்கினார். திரு.சீனா தானா அவர்களுக்கு தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவிக்க கவிஞர் தஞ்சாவூரான் நினைவுப் பரிசினை வழங்கினார்.
செந்தமிழும் சென்னைத் தமிழும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடத்தித் தந்த திருமதி. ரமா மலர்வண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசை திருமதி.சபீனா வினோத் வழங்கினார். அதிரை இளைய சாகுல் அவர்களுக்கு ஹெல்த் கணேசன் நினைவுப் பரிசினை வழங்கினார்.
ஆதலால் திரும்பிப் பார் நூலினை திரு.எஸ்.எம்.இதயத்துல்லா அவர்கள் வெளியிட திரு.சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திருமதி. நர்கீஸ் பானு அவர்கள் வெளியிட திருமதி. கோமதிராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திருமதி.ஸ்வேதா வெளியிட முகவை காளிதாஸ் பெற்றுக் கொண்டார்.
உயிர் மற்றும் ஓவியம் தலைப்புகளில் திருமதி.சபீனா வினோத், திருமதி. ஸ்வேதா, திரு.சந்திரசேகர், திரு.இராமலிங்கம், கவிஞர் இளையசாகுல் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
திருமதி.நர்கீஸ் பானு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுத்தீன், ஆதிபழனி, எம்.எம்.இப்ராஹிம் மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications