இந்திய குடியரசு தினம்-துபாயில் ரத்ததான முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா ரத்ததான முகாமினை துவக்கி வைத்து முதல் ஆளாக ரத்ததானம் செய்தார். இந்திய குடியரசு தின விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின விழாவினையொட்டி நடைபெறும் சிறப்பு ரத்ததான முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார். ரத்ததானம் வழங்கும் அனைவரையும் அவர் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தானுபே நிறுவனத்தின் நிறுவன தலைவர் ரிஜ்வான் சாஜன் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா செய்து வரும் ரத்ததான சேவையினை பாராட்டினார்.
லத்திஃபா மருத்துவமனையின் நாதிய அப்துல்லாஹ் கலந்தர் தனது வாழ்த்துரையில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரத்ததான சேவையினை மேற்கொண்டு வருவது குறித்து பெருமிதம் தெரிவித்தார். நினைவுப் பரிசுகளை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவர் மோகன் ஆகியோருக்கு வழங்கி கௌரவித்தார்.
ரத்ததானம் செய்ய வந்தோருக்கு இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் ரத்ததான முகாமில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவநந்தன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு பீச்சர் விஷன், கோட்டார் இன்டீரியர்ஸ், நியூ வே ஆட்டோ பார்ட்ஸ், அல் அக்பர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ மற்றும் சூப்பர் 94.7 எஃப்.எம். ஆகிய நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.












Click it and Unblock the Notifications