ஓவர் குண்டான அம்மாக்களின் குழந்தைகளுக்கு ஆயுள் குறைவாம்: ஆய்வில் தகவல்
பாரீஸ்: குண்டான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 35 சதவீதம் பேர் 55 வயதுக்கு முன்பு இறந்துபோகும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1950ல் இருந்து 1976 வரை பிறந்த 37,709 குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்து கொண்டபோது அவர்களுக்கு 34 முதல் 61 வரை வயது இருந்தது. அதில் 6,6551 பேர் ஆய்வுக்கு முன்பே இறந்துவிட்டனர்.

இந்த குழந்தைகளை பெற்ற 28,540 பெண்களில்
21 சதவீதம் பேர் ஓவர் வெயிட்டானவர்கள். அவர்களின் பி.எம்.ஐ. 25 முதல் 29.9 சதவீதம் இருந்தது. மேலும் 4 சதவீதம் பேர் உடல் பருமானால் அவதிப்பட்டவர்கள். அவர்கள் குழந்தையை பெற்றபோது அவர்களின் பி.எம்.ஐ. 30 மற்றும் அதற்கு மேல் இருந்தது.

55 வயது
உடல் பருமனான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 35 சதவீதம் பேரும், ஓவர் வெயிட்டான பெண்களின் குழந்தைகளில் 11 சதவீதம் பேரும் 55 வயதுக்கு முன்பு இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு நடத்திய எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியை ரெபக்கா ரேனால்ட்ஸ் தெரிவித்தார்.

இதய நோய்
உடல் பருமனான பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் 42 சதவீதம் பேர் வளர்ந்த பிறகு இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குழந்தைகள்
அம்மா குண்டாக இருந்தால் பிறக்கும் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட காலம் வாழ முடியாமல் போகிறது என்பது இந்த ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

2.8 மில்லியன் பேர்
கடந்த 2008ம் ஆண்டில் 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 1.4 பில்லியனுக்கும் அதிகமானோர் ஓவர் வெயிட்டாக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில் உடல் எடை தொடர்பான பிரச்சனைகளால் ஆண்டுதோறும் 2.8 மில்லியன் பேர் இறக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications