துபாயில் பாக்யராஜ், பூர்ணிமா பங்கேற்ற பொங்கல் விழா
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா கடந்த மாதம் 22ம் தேதி சிறப்பாக நடந்தது.
துபாயில் முத்தமிழ்ச் சங்கம், மெய்யுணர்வு மையத்துடன் இணைந்து மாபெரும் பொங்கல் விழாவினை 22.02.2013 அன்று மாலை 6 மணிக்கு துபாய் இந்தியப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்பாக நடத்தியது.
முத்தமிழ்ச் சங்க தலைவர் திரு. மோகன் தலைமையில் நடந்த விழாவில் மெய்யுணர்வு மைய இயக்குநர் தமிழ் பேராளர் க.மு. சிவசாமி சிறப்புச் சொற்பொழிவாற்றினார். விழா ஏற்பாடுகளை திருமதி. லக்ஷ்மி ப்ரியா, திருமதி. அனு, திரு. ரமணி, திரு. ஷா, திரு பாலாஜி நரசிம்மன், திரு. அருண், திரு. சிகாமணி, திரு. தனசேகர், திரு. கணேசன் மணி செய்திருந்தார்கள்.

மனைவியுடன் வந்த பாக்யராஜ்
திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சி
மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சியும், திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. குமாரி ஷப்னம், திருமதி. வரலக்ஷ்மி, திரு, கிஷோர் அவர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடி பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர்.

மாணிவிகளுடன் பாக்யராஜ், பூர்ணிமா
கலை நிகழ்ச்சியில் அழகாக ஆடிய மாணவிகளுடன் பாக்யராஜ் தம்பதி.












Click it and Unblock the Notifications