ஆகஸ்ட் 1ல் குவைத்தில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி: கே-டிக் ஏற்பாடு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி வரும் ஆக்ஸ்ட் 1ம் தேதி குவைத்தில் நடைபெறுகிறது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இவ்வருடம் குவைத்தில் முதல் முறையாக தமிழக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆ பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றது.
குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கான அமைப்புகள் மூலமாக அவர்களின் மொழி மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு நாளில் சிறப்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம். அந்த வகையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வாயிலாக மாபெரும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மாலை 5 மணி முதல் குவைத் மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலின் சிறப்பு இஃப்தார் கூடாரத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி, அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள், நிறுவனர் மற்றும் முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications