சங்கராபுரத்தில் நடந்த கம்பன் தமிழ்ச் சங்க தொடக்க விழா கூட்டம்

Subscribe to Oneindia Tamil

Kamban Tamil Sangam inaugural function
விழுப்புரம்: சங்கராபுரத்தில் கம்பன் தமிழ்ச் சங்க தொடக்க விழா கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கம்பன் தமிழ்ச் சங்க தொடக்க விழா கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். புலவர் சிவலிங்கம், தங்கவேல், சுப்புராயுலு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். செஞ்சி ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார். சண்முகா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இராமு "கம்பன் காட்டும் முத்தமிழின்பம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

'வஹியாய் வந்த வசந்தம்' நூலை இதயத்துல்லா அறிமுகப்படுத்தி பேசினார். கம்பன் தமிழ்ச் சங்கத்தில் புரவலராக இணைத்துக் கொண்ட நல்உள்ளங்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர் முகமது, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்க தலைவர் உதியன், சங்கைத் தமிழ்ச் சங்க தலைவர் சுப்புராயன், திருக்குறள் பேரவை அமைப்பாளர் இலட்சுமணன், முத்தமிழ் மன்றம் தென்னவன், முத்துக்கருப்பன், ஸ்டார் கிளப் செயலாளர் சையத் பஷீர், வாசவி கிளப் ரகுநாதன், ஜனனி மகாலிங்கம், பேராசிரியர் அப்சர் பாஷா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, குசேலன், மனிதநேய அறக்கட்டளை வைத்திப்பிள்ளை, ராஜாராம், நல்லாசிரியர் கலியராமன், துரைசாமி, ஜனார்த்தனசிங், சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் ஸ்டார் பள்ளி செயலாளர் முகமத் ரபி நன்றியுரை நிகழ்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+