7ம் தேதி துபாயில் நிரித்ய சமர்ப்பண்: இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி
துபாய்: துபாயில் நிரித்யசமர்ப்பண் 2013 எனும் இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி 07.06.2013 அன்று மாலை 5.30 மணிக்கு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சுலேட் அதிகாரிகள் பி.கே. அசோக் பாபு, எம்.பி. சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நிரித்யசமர்ப்பண் குறித்த அறிமுக நடனத்தை நடன ஆசிரியை கவிதா பிரசன்னா வழங்குகிறார்.
சிவ புராணத்தில் இருந்து நடன நிகழ்வுகளை கிருஷ்ண லீலாவும், ராஜஸ்தான், தமிழகம், கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநில நடனத்தை நினைவு கூறும் நடன நிகழ்வுகள் உள்ளிட்டவை நடைபெற இருக்கின்றன.
நிரித்ய சமர்ப்பண் 2013 எனும் இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு பிவிஇ கிரேன்ஸ் மிடில் ஈஸ்ட், அல் நபூதா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ், என்.எம்.சி. ஹெல்த்கேர், கிளாஸ் மெடிக்கல் சென்டர், அல் கரவான் கேரேஜ், பிளாக் டுலிப் பிளவர்ஸ், ஏ.எஸ். லைட்டிங் சப்ளைஸ், ஜிஜி எமிரேட்ஸ், பெருமாள் பூக்கடை, சிவ ஸ்டார் பவன் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.
ஒன் இந்தியா தட்ஸ் தமிழ்.காம், தினமலர் நாளிதழ், முதுகுளத்தூர்.காம் ஆகியவை ஊடக அணுசரனை வழங்கியுள்ளன.