கிராமத்து திருவிழா: பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகள்… மஞ்சத்தண்ணீர் விளையாட்டு
சென்னை: கரகம் எடுத்தல்... கத்தி போடுதல்..... அம்மன் ஊர்வலம், பால்குடம், முளைப்பாரி என கிராமங்களில் திருவிழா என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான். சொந்த பந்தம், நட்புகளுடன் கொண்டாட்டமாய் கழியும் அந்த பத்து நாட்களும் உற்சாகம்தான்.
ஒரு வருடம் வேலை செய்த களைப்பினை போக்கி புத்துணர்ச்சி தருவது இதுபோன்ற திருவிழாக்கள்தான். இந்த ஆண்டு சிவகாசி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் பெரிய கும்பிடு எனப்படும் திருவிழா நடைபெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருவிழா இந்த தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திருவிழாவின் முக்கியத்துவத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

48 நாட்கள் விரதம்
பெரியகும்பிடு என்பது எல்லோராலும் கொண்டாட முடியாது. 48 நாட்கள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். இரண்டு வேளை உணவு, செருப்பு கூட போடாமல் கடுமையான விரதம் இருப்பது அவசியம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஒரு கிராமமே 48 நாட்கள் விரதம் கடைபிடித்தனர்.

கோவில் கும்பாபிஷேகம்
ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கிராமத்தின் புடை சூழ வெகு விமரிசையான கும்பாபிஷேகம்.

மஞ்சள் தேவதைகள் பால்குடம்
ஆயிரக்கணக்காக கிராமப் பெண்கள் எடுத்து வந்த பால்குடம்.

அம்மனுக்கு பாலபிஷேகம்
பெண்கள் எடுத்து வந்த பால் குடத்தில் அம்மனுக்கு அபிஷேகம்

கண் திறந்த அம்மன்
பாலபிஷேகம் நடக்கும் போதே அம்மன் கண் திறந்து அருள் புரிந்ததாக தீயாக தகவல் பரவியது.

குத்துவிளக்கு பூஜை
குலம் தழைக்க அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை செய்த பெண்கள்

அம்மனை அழைக்க புறப்பாடு
ஊர் எல்லையில் இருந்து கிராமத்திற்கு அம்மனை அழைத்து வர சென்ற ஆண்கள்

அம்மன் கரகம்
மல்லிகைக் கரகத்தில் எழுந்தருளிய அம்மன்... ஊரே திரண்டு வந்து வழிபட்டனர்.

பட்டாம்பூச்சிகள்
கிராமத்து திருவிழாவில் பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகளுக்கு பஞ்சமிருக்காதே.

கத்தி போட்ட இளசுகள்
அம்மனுக்கு சக்தியூட்ட ஆக்ரோசமாக கத்தி போட்டு வழிபட்ட சிறுவர்களும், இளைஞர்களும்.

அம்மன் ஜம்தாடு
ஜம்தாடு கத்தியில் தான் அம்மன் உறைகிறாள் என்பது ஐதீகம். புனித நீர் நிறைந்த பானையில் 24 மணிநேரம் எந்த வித ஆதாரமும் இன்றி அம்மன் சக்தியாய் நின்று அருள்புரிந்தாள்.

முளைப்பாரி ஊர்வலம்
அம்மனுக்கு முளைப்பாரி எடுத்த இளம் பெண்கள்.

அலங்கார ரூபினி
அபிஷேக ஆராதனை முடிந்து அலங்கார ரூபினியாய் எழுந்தருளிய ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்.

மஞ்சத்தண்ணி
திருவிழா முடிந்த அடையாளமே மஞ்சத்தண்ணீர் விளையாட்டுதான் மாமன் மகள், அத்தை மகன் என ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீற்றி விளையாடுவார்கள். அதோடு திருவிழா முடிந்து விடும். அப்புறம் என்ன அடுத்த திருவிழாவிற்கு இன்னும் ஒருவருடம் இருக்கே என்ற ஆதங்கத்தோடு அவரவர் ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications