கிராமத்து திருவிழா: பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகள்… மஞ்சத்தண்ணீர் விளையாட்டு
சென்னை: கரகம் எடுத்தல்... கத்தி போடுதல்..... அம்மன் ஊர்வலம், பால்குடம், முளைப்பாரி என கிராமங்களில் திருவிழா என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான். சொந்த பந்தம், நட்புகளுடன் கொண்டாட்டமாய் கழியும் அந்த பத்து நாட்களும் உற்சாகம்தான்.
ஒரு வருடம் வேலை செய்த களைப்பினை போக்கி புத்துணர்ச்சி தருவது இதுபோன்ற திருவிழாக்கள்தான். இந்த ஆண்டு சிவகாசி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் பெரிய கும்பிடு எனப்படும் திருவிழா நடைபெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருவிழா இந்த தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திருவிழாவின் முக்கியத்துவத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

48 நாட்கள் விரதம்
பெரியகும்பிடு என்பது எல்லோராலும் கொண்டாட முடியாது. 48 நாட்கள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். இரண்டு வேளை உணவு, செருப்பு கூட போடாமல் கடுமையான விரதம் இருப்பது அவசியம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஒரு கிராமமே 48 நாட்கள் விரதம் கடைபிடித்தனர்.

கோவில் கும்பாபிஷேகம்
ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கிராமத்தின் புடை சூழ வெகு விமரிசையான கும்பாபிஷேகம்.

மஞ்சள் தேவதைகள் பால்குடம்
ஆயிரக்கணக்காக கிராமப் பெண்கள் எடுத்து வந்த பால்குடம்.

அம்மனுக்கு பாலபிஷேகம்
பெண்கள் எடுத்து வந்த பால் குடத்தில் அம்மனுக்கு அபிஷேகம்

கண் திறந்த அம்மன்
பாலபிஷேகம் நடக்கும் போதே அம்மன் கண் திறந்து அருள் புரிந்ததாக தீயாக தகவல் பரவியது.

குத்துவிளக்கு பூஜை
குலம் தழைக்க அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை செய்த பெண்கள்

அம்மனை அழைக்க புறப்பாடு
ஊர் எல்லையில் இருந்து கிராமத்திற்கு அம்மனை அழைத்து வர சென்ற ஆண்கள்

அம்மன் கரகம்
மல்லிகைக் கரகத்தில் எழுந்தருளிய அம்மன்... ஊரே திரண்டு வந்து வழிபட்டனர்.

பட்டாம்பூச்சிகள்
கிராமத்து திருவிழாவில் பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகளுக்கு பஞ்சமிருக்காதே.

கத்தி போட்ட இளசுகள்
அம்மனுக்கு சக்தியூட்ட ஆக்ரோசமாக கத்தி போட்டு வழிபட்ட சிறுவர்களும், இளைஞர்களும்.

அம்மன் ஜம்தாடு
ஜம்தாடு கத்தியில் தான் அம்மன் உறைகிறாள் என்பது ஐதீகம். புனித நீர் நிறைந்த பானையில் 24 மணிநேரம் எந்த வித ஆதாரமும் இன்றி அம்மன் சக்தியாய் நின்று அருள்புரிந்தாள்.

முளைப்பாரி ஊர்வலம்
அம்மனுக்கு முளைப்பாரி எடுத்த இளம் பெண்கள்.

அலங்கார ரூபினி
அபிஷேக ஆராதனை முடிந்து அலங்கார ரூபினியாய் எழுந்தருளிய ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்.

மஞ்சத்தண்ணி
திருவிழா முடிந்த அடையாளமே மஞ்சத்தண்ணீர் விளையாட்டுதான் மாமன் மகள், அத்தை மகன் என ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீற்றி விளையாடுவார்கள். அதோடு திருவிழா முடிந்து விடும். அப்புறம் என்ன அடுத்த திருவிழாவிற்கு இன்னும் ஒருவருடம் இருக்கே என்ற ஆதங்கத்தோடு அவரவர் ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications