கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய லண்டன் தமிழ்சங்கம்

தமிழ்க் கலாச்சாரத்தை பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இலண்டன் நியூ ஹாம் டவுன் ஹாலில் ஜனவரி 19ம் தேதியன்று மிக விமரிசையாக பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவினை தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி துவக்கி வைத்தனர். இதை தொடர்ந்து நாதஸ்வர கச்சேரி சிறப்பாக நடைப்பெற்றது. லண்டனை சேர்ந்த பரதக் கலைஞர் பரத நாட்டியம் மிகச்சிறப்பாக ஆடினர். தமிழ்ச் சங்கத்தின் முதியோர்கள் குழுவினர் பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடினர்.
தமிழ் பள்ளி மாணவர்கள் நடனம்
தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு நடனம், பாடல் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி சிறப்பித்தனர். தமிழ் பள்ளி மாணவ மாணவிகளால் திரைப்பட பாடல்களை கலவையாக கொண்டு வழங்கப் பட்ட நடன நிகழ்ச்சி விழா அரங்கை பார்வையாளர்களின் கரவோசையால் அதிர வைத்தது.
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
அழிந்து வரும் தொன்மையான தமிழ்க் கலைகளுக்கு பெருமையளிக்கும் வகையில் தமிழ்ப் பள்ளி மாணவிகளும், குடும்பத் தலைவிகளும் இணைந்து கிராமிய நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
மாற்றோர் கலைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற "பாலிவுட்" நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளம் மங்கையர்களின் நடனம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்தது.
சிறப்பு மிக்க இந்த விழாவில் இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டனை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் விழாவில் கலந்து கொண்டு லண்டன் தமிழ் சங்கம் கடந்த பல வருடங்களில் செய்த சேவைகளை பாராட்டி பேசி கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ்சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மெட்ரோபாலிட்டன் காவல்துறை மற்றும் ஜே.எஸ் செக்யூரிட்டி நிறுவனத்தினர் மிக சிறப்பாக செய்தனர்.












Click it and Unblock the Notifications