11ம் தேதி துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா 11.01.2013 அன்று காலை 9.30 மணிக்கு துபாய் க்ரீக் பூங்காவில் நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்படும்.
விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை 055 163 45 65/ 050-7472432 / 050-5986774 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் வரும் உறுப்பினர்களுக்கு தமிழ்த்துளியின் சார்பில் க்ரீக் பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
சார்ஜாவில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்படும் என்றால் விழாக் குழுவினரை தொடர்பு கொள்ளவும். அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு தமிழ்த்துளி தங்களை அன்புடன் வரவேற்கிறது.












Click it and Unblock the Notifications