25ல் பொங்கல் விழா கொண்டாடும் ராசல் கைமா தமிழ் மன்றம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ராசல் கைமா தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
துபாயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராசல் கைமா. இங்குள்ள தமிழ் மன்றத்தில் வரும் 25ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்தியன் சங்க வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்புற நடைபெற இருக்கிறது.
அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய சின்னத்திரை கலைஞர்கள் தேவகோட்டை ராமநாதன், திருச்சி சரவணன், கே. பழனி, பிரசன்னா மணிகண்டன், டாக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
மேலும் குழந்தைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் ஹபீப் 050 647 2868 / பூபதி 050 750 1359 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications