துபாய் சங்கீத சங்கமத்தில் நாட்டாமை சரத்குமார்
துபாய்: கடந்த 29ம் தேதி துபாயில் நடந்த சங்கமம் டிவியின் சங்கீத சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
துபாய் ஜேஎஸ்எஸ் பள்ளி அரங்கத்தில் கடந்த 29ம் தேதி மாலை 6 மணியளவில் சங்கமம் டிவி- சங்கீத சங்கமம் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தியது.
நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமீரக தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்ச்சியை திருமதி. லக்ஷ்மி ப்ரியா, திரு. சசி தொகுத்து வழங்கினார்கள்.

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கம்
திருமதி. ஷா, திருமதி. பாரதி, திருமதி. வசந்தி, திருமதி. வித்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

சிறப்பு விருந்தினராக சரத்குமார்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரீம் ஸ்டார் திரு. சரத்குமார், சமூக சேவகி திருமதி. உமா ப்ரேமன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். சரத்குமாருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தப்பட்டது.

ஹரீஷ் ராகவேந்திராவின் இசை மழை
பிரபல பின்னனி பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா, பாடகி மின்மினி, மற்றும் துபாய் பாடகர் வெங்கட், பாடகிகள் ஷப்னம் ஷா, அஸ்வதி ஆகியோர் தமிழ் திரைப் பாடல்களை பாடி அரங்கத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள்.

கண்கவர் நடனம்
இசை நிகழ்ச்சியுடன் கண்கவர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிரம்பி வழிந்த அரங்கம்
சங்கமம் நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் அபுதாபி சோஷியல் சென்டர் திரு. நடராசன், முத்தமிழ் சங்க தலைவர் திரு.மோகன், தமிழ் பெண்கள் சங்கம் திருமதி. மீனாகுமாரி, ஜாகுவார் குரூப் திரு. ஷா, கராமா மெடிக்கல் சென்டர் திரு. வில்லியம், டட்கோ திரு. சிங்காரவேலன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறபித்தனர். விழா ஏற்பாடுகளை சங்கமம் டிவி டைரக்டர் திரு. கலையன்பன் மற்றும் சங்கமம் டிவி குழுவினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications