For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவனன்றி அணு கூட அசையாது… உள்ளம் உருக்கும் சிவரஞ்சனியின் பாடல்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவனைப் பற்றிய பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடகர்கள் சிவனைப் பற்றி பாடியுள்ளனர். இருந்தாலும் புதிது புதிதாக பாடல்களும், இசைத்தட்டுக்களும் வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

திரைப்பட இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் சிவனைப் பற்றிய எட்டு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சிவரஞ்சனி என்று பெயரிடப்பட்டுள்ள ஆடியோ சிடி ஞாயிறு மாலை வெளியிடப்பட்டது.

Sivaranjani CD Album function

நீதியரசர் பி. பாஸ்கரன் இசைத் தகட்டினை வெளியிட பிரபல கர்நாடக சங்கீத பாடகர் உன்னி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலைஞர் தொலைக்காட்சியின் முதுநிலை மேலாளர் ஃபிளாரன்ஸ் பெராரா, கல்யாணமாலை மோகன், இயக்குநர் அரவிந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த இசைத் தகட்டிற்காக பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன், ஏ.ஆர். ராஜநாராயணன், கோவையைச் சேர்ந்த கவிஞர் பழமன், அகியோர் எழுதியுள்ளனர்.

அறிந்தோ அல்லது... கேளுங்கள்... கேளுங்கள்... ஐங்கரன் தந்தையே..., அவனன்றி அணுகூட அசையாது.... சிவபெருமானே... எங்கும் நிறைந்தவனே... அழைத்தால் வருவான்... ஆகிய எட்டு பாடல்களை பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன், ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆஷிஸ் உத்ரியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

English summary
Justice P.Baskaran released Sivaranjini while Singer Unni Krishnan received the same. Sivaranjini is an album contains eight songs on Lord Siva and composed by music director Aadhish Uthriyan. Lyricists Poovai Senkuttuvan , A.R.Rajanarayanan have written songs with Pazhaman- a poet from Kovai. Famous playback singers Mano, Unnimenon, Unni krishnan, Madhu Balakrsihnan and Ranjini V iyer have sung the songs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X