துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி ஜனவரி 11ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன் மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உட்பிரிவில் பேசலாம்.
போட்டியாளர்கள் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் மட்டுமே பேச வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். போட்டி நடைபெறும் அரங்கில் பேச்சாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தஙக்ளது வருகையினை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் விபரங்கள் பெற 056 684 71 20 / 050 51 96 433 / 055 41 45 064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications