இந்திய குடியரசு தினத்தையொட்டி துபாயில் சிறப்பு ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil

துபாய் இந்திய கன்சுலேட், இந்திய சமூக நல மையம் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்திய குடியரசு தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ரத்ததான முகாமினை வரும் 18ம் தேதி காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.
ரத்ததான முகாமிற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை தாங்கிறார். தானுபே குரூப்பின் தலைவர் ரிஜ்வான் சாஜன் தலைமை விருந்தினராகவும், துபாய் லத்திஃபா மருத்துவமனை ரத்த வங்கியின் நாதியா அப்துல்லா கலந்தர் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
ரத்த தானம் செய்ய விரும்புவோர் 050 151 27 57/ 055 50 18 217/ 055 220 72 63 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications