For Daily Alerts
Just In
லண்டன் தமிழர்களை இசை மழையில் நனைத்த ஸ்ரீ தியாகராஜ ஆராதனை மகோற்சவம்
லண்டன் சத் சங்கம் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை மகோற்சவ விழாவுக்கு ஏற்பாடு செய்தது. இந்த விழா கடந்த 9ம் தேதி எலிங் நகர சர்ச் ஆப் அசசென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
கணேச பூஜை மற்றும் ராக சவுகாஸ்டிரத்தில் கணபதிம் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இதையடுத்து திவ்யநாம கீர்த்தனைகள், சம்பிரதாய பஜனை பாடல்கள், தனிப்பாடல்கள்
பாடப்பட்டன. ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திவ்யநாம கீர்த்தனைகள், சம்பிரதாய பஜனை பாடல்களும் பாடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் லண்டன் வாழ் சிறார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
Comments
English summary
London Sath Sangam arranged for Sri Thyagaraja Aradhana Mahotsav on february 9. Tamils living in London attended the programme.