குற்றாலத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் பயிலும் மாணவர்கள் சற்றொப்ப நூறு பேருக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் முதுகலை, எம்.பில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.
பயிற்சி நாள்: 02.02.2013, மற்றும் 03.02.2013(சனி, ஞாயிறு இரண்டு நாள்).
நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை நடைபெறும்.
பயிற்சி வழங்குபவர்: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
தமிழக அரசு வழங்கியுள்ள மடிக்கணினியைப் பயன்படுத்தித் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ்த்தட்டச்சு செய்வது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுவது, தமிழ் மின்னிதழ்களுக்கு எழுதுவது, தமிழ் ஆய்வுத்தளங்களின் அறிமுகம், சமூகவலைத்தளங்களில் எழுதுவது என்று அனைத்துநிலைப் பயிற்சியும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்ப்பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்