துபாய் முஷ்ரிப் பூங்காவில் கூடிய தமிழ்ப் பெண்கள் சங்கத்தினர்

பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியம் உண்டு. அதை மனதில் வைத்து சிகை அலங்காரம், நகம் மின்ன அலங்காரம் என அதில் தேர்ந்த உறுப்பினர்கள் சொல்லித்தர மற்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். உறுப்பினர்களின் திருவாளர்களும் குழந்தைகளோடு சேர்ந்து அவர்களுக்குச் சமமாக விளையாடி மகிழ்ந்தனர்.
உறுப்பினர் ஒருவரின் மகன் கராத்தேயில் தான் கற்ற கதா செய்து காண்பித்தது சிறப்பு. உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்த பயனுள்ள செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் நீ என்று போட்டி போட்டனர். மதிய உணவு ஆர்யாஸிலிருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உணவிற்குப் பின் சிறுசிறு விளையாட்டுக்களையும் முடிக்க, தேர்வுக்காலமாக இருந்தாலும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிகழ்ச்சி நடத்தி அசத்திவிட்டதாக உறுப்பினர்கள் மனம் திறந்து பாராட்டியது அடுத்த நிகழ்ச்சிக்கான அச்சாரமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications