நாளை துபாயில் முஸ்லீம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கம்
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் 2 பேரணி விளக்க கருத்தரங்கு நாளை(14.03.2013) இரவு 8 மணிக்கு சோனாப்பூர் பவர் குரூப் கேம்ப் மஸ்ஜிதில் நடைபெற இருப்பதாக கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு சோனாபூர் கிளை செயலாளர் ராமநாதபுரம் ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகிக்கிறார். விழாக்குழு செயலாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி முன்னிலை வகிக்கிறார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.

ஷஹாபுதீன் நன்றியுரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 110 96 40 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications